நாட்டுக்கு இது இப்ப மிகவும் முக்கியமா என்று நினைக்காதவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்
பொதுவாக கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் சினிமாப்பாடலுக்கு நடனமாடுவதை எதிர்போர் சங்கத்தினைச்சேர்ந்தவன் என்றபோதிலும் “கல்யாணந்தான் கட்டிக்கிட்டு …..” , “உன்னோட புருசனாக..” போன்ற வாழ்வியலுக்கு வழிகாட்டும் தத்துவப்பாடல்கள் அல்லாது ஜனரஞ்கத்தையும் சுவாரசியத்தையும் வரவழைக்கக்கூடிய தன்னம்பிக்கைப்பாடல்கள் மற்றும் கர்நாடக சங்கீதப்பாடல்களுக்கு ஆபாசமில்லாது ஆடுவதில் தவறில்லை என்பது அடியேனின் கருத்து.
இப்போது நான் கூறவரும் விடயம் என்னவென்றால் “ சலங்கை ஓலி” திரைப்படத்தில் வரும் “ஓம் நமசிவாய” எனும்பாடல். இப்பாடலுக்கு சைலஜா நடனமாடி இருந்ததுடன் கமலும் ஒருபத்திரிகையாளராக வந்துபோவார்.
இப்பாடலில் பஞ்ச பூதங்கள் என்பவற்றுக்கு நிலம் நீர் தீ காற்று, ஆகாயம் என பொருள் கொள்ளாமல் 5 பேய்கள் என சைலஜா அபிநயித்திருப்பார். எனினும் கமல் அது தவறு என பத்திரிகையில் எழுதி அது தொடர்பாக விளக்கம் கேட்கவரும் சைலஜாவிற்கும் அவரது காதலருக்கும் பல்வேறு சம்பிரதாயஙகளில் ஆடிக்காட்டி அசத்துவார்…….
இப்ப நான் கமலஹாசன் ஆக வெளிக்கிடல்ல………….
ஊரில 3 நிகழ்சில பார்த்திருக்கன் தொலைக்காட்சில 2 தடவ பார்த்திருக்கன் ஆடிற ஆக்கள் அச்சு பிசகாம ஆடிறாங்க ஆனா பஞ்ச பூதத்திற்கு 5 பேய காட்டித்தான் ஆடுறாங்க யாராவது அத திருத்த சொல்லமாட்டங்களா?
என்னதான் இருந்தாலும் இதபோல வருமா?
+ comments + 3 comments
mm master new achivement
Thanks Vithu...
suren welcome blogsite,